வியாழன், 3 டிசம்பர், 2015

நொருக்கு தீனிகளால் ஊட்டச்சத்து குறைபாடு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்.

நொருக்கு தீனிகளால் ஊட்டச்சத்து குறைபாடு   நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்.

பந்தலூர் , டிச. 5: பந்தலூரில் டியூஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய நுகர்வோர் விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுதீந்திரநாத் தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் மைய ஆலோசகர் காளிமுத்து, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், சாலோம் அறக்கட்டளை இயக்குனர் விஜயன் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவரும், நீலகிரி மின் நுகர்வோர் குறை தீர் மன்ற உறுப்பினருமான சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு குறைவாக உள்ளதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்கள் மத்தியில் தற்போது நொருக்கு தீனி பழக்கம் அதிகரித்துள்ளது.  இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகின்றது.  ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகின்றது.  இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் இதர திறன் மேம்பாடுகளில் கவனம் செலுத்த முடியாமலும் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்து பாணங்கள் மூலம் உடலுக்கு தேயைான சத்துக்கள் கிடைக்காது நாம் உண்னும் உணவே உடலுக்கு தேவையான சத்துக்களை தருகிறது. தேவையற்ற செலவினங்களை அதிகமாக செலவிடுவதால் மக்களிடையே சேமிப்பு பழக்கம் குறைவாக உள்ளது, இதனால் அவசர தேவைக்கு கடன் வாங்கி பலரும் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே மாணவர்கள் ஊட்டச்த்து மிக்க இயற்கை உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.  தேவையற்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்,  சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்றார். மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக ஆசிரியர்  சத்தியவதி  வரவேற்றார்.  முடிவில் ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.