ஞாயிறு, 23 டிசம்பர், 2018

நுகர்வோர் விழிப்புணர்வு




காசு கொடுத்துதானே சார் வாங்குறீங்க....? 
நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை!

 அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் நுகர்வோராய் இருக்கும் நாம் 

வியாபாரிகளை பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சொல்வோம் 

ஆனால் நுகர்வோரின் கடமைகள் என்ன? என்று நமக்குத் தெரியுமா?  

இது பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை இதோ...

முக்கியப் பேருந்து நிலையங்கள் போன்ற, அவசரகதியாக மக்கள் கூடும் இடங்களில் அமைந்திருக்கும் கடைகளில் சென்று பொருட்களை வாங்கும் போது பார்த்தால், பெரும்பாலும் இரண்டு மூன்று ரூபாய் அதிகம் விலை வைத்தே விற்பனை செய்கிறார்கள். 

என்னது இது? எம்.ஆர்.பி இவ்வளவு தானே, ஏன் அதிகமான விலைக்கு இந்த பொருட்களை விற்கிறீர்கள் என்று கேட்டு விட முடியாது. 

அப்படிக் கேட்பின் சுற்றி நிற்பவர்களும், கடைக்காரரும் நம்மைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே... கொடுமை. அத்தனை ஏளனம் இருக்கும். நாம் வாங்குகின்ற பொருளுக்கு காசு குடுக்கின்ற நாம் எஜமானர்கள் கிடையாது. 

இது தான் நடப்பில் உள்ள நிதர்சனமான உண்மை. சரி, அதட்டித்தான் கேட்க வேண்டாம், "என்ன சார் இது? இப்டிப் பண்றீங்களே" என நியாயமான முறையில் கேட்டாலும் கூட... அதான் எல்லாரும் வாங்கிட்டுப் போறாங்களே.. 

உனக்கு மட்டும் என்னய்யான்னு துரத்தாத குறையாக, ஒரு அலட்சியப் பதில் வரும். ஏன் இந்த நிலை? எப்படி நாம் இந்த சூழலுக்குத் தள்ளப் பட்டோம்?
நம் மனமும் இது போன்ற அநியாயங்களுக்கு வேறு வழியின்றி இசைந்து,சகித்துக் கொள்ளப் பழகி விட்டது போலும்... 

மற்றவர்களும் வாங்கி விட்டுத் தானே செல்கிறார்கள். நமக்கு மட்டும் என்ன? என்று போகவும் மனமில்லை. 

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வாங்கிவிட்டுச் செல்லும் அத்துனை பேர்களும் 1% அளவாவது எரிச்சல் படாமல் இல்லை. 

இது தான் நம் தலையெழுத்து போலும். நாம்(சாமானியர்கள்) ஒடுக்கப்படும் போது, எங்குமே குரல் எழுப்பக் கூட முடியாதபடி தான் நம் குரல்வளைகள் குடும்பம் என்ற கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன

.சரி.. ஒரு சாமானிய மனிதனாக... 

இதை எப்படித் தட்டிக் கேட்பது? இல்லையென்றால் யாரிடம் புகார் அளிப்பது என விசாரித்ததில் கிடைத்த தகவலைப் பார்ப்போம்.
  MRP -ஐ விட பத்து பைசா அதிகம் வாங்கினாலும் அதற்கான பில்லை முதலில் வாங்குங்கள். அப்படியே சென்று நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் ஒரு புகார் செய்தால் போதும். மற்றவை தானாகவே நடந்துவிடும்

அல்லது உங்கள்  ஊரில் உள்ள நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் உணவுகலப்பட  தடுப்புப் பிரிவில் சென்று புகார் தாருங்கள். 

ஏனெனில் அவர்கள் தான் இதை ஆய்வுசெய்து கண்டுபிடிக்க கடமைப் பட்டவர்கள்.  

எனவே புகார் அளிப்பதற்கு ரசீது(பில்) வேண்டும். அது சரி.. நம் நாட்டில் எல்லாக் கடைகளிலும் பில்லிங் வசதி உண்டா? அதையும் பார்ப்போம்..

விற்பனைவரி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காத ஒரு சிறு அல்லது  சாலையோரக் கடைகளில் மட்டுமே பில் இருக்காது. மற்றபடி பதிவு செய்யப்பட்டிருக்கும் கடைகள் அனைத்திலும் பில் கண்டிப்பாக இருக்கவேண்டும். 

இப்பொழுது கேள்வி என்னவென்றால் அனைத்துக் கடைகளிலும் பில்லிங் வசதியைக் கட்டாயப் படுத்தினால் தான் என்ன? இது சாத்தியமா? இதனால் உண்டாகும் நன்மைகள் என்ன? என ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
பில்லிங் முறையை அனைத்துக் கடைகளிலும் கட்டாயப்படுத்தினால் என்ன நன்மை? நிச்சயமாக  பில் போட்டு வாங்கினால் தான் அந்த பொருளுக்கான வரி அரசாங்கத்திற்குச் செல்லும்.  அரசாங்கம் நினைத்தால் எதுவுமே சாத்தியம் தான். 

ஆனால் சிறு, குறு மற்றும் நடைபாதைக் கடைகள் வரிவிதிப்பில் கொண்டுவந்தால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர். 

மிகப்பெரிய லஞ்சத்திற்கு வழிவகை செய்யும். விலைவாசி மிகக்கடுமையாக உயரும்.

இதையெல்லாம் சரி செய்ய வரிவிதிப்பில் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். 

அது மிகவும் எளிமையாகவும், வியாபாரிகளுக்கும் அரசுக்குமான நேரடி தொடர்பில் நடக்க வேண்டும். வியாபாரிகளை தாமாக வரிகட்ட  முன்வரவைக்க வேண்டும். 

இது மிகவும் சாத்தியம் தான். அரசுக்கும் இப்பொழுது உள்ளதை விட அதிக  வருமானம் கிடைக்கும், விலைகளும் பெறுமளவில் குறையும். வியாபாரிகளும் நிம்மதியாக மக்களுக்கு இன்னும் பல வசதிகளுடன்  கூடிய சேவையைத் தருவார்கள். 

ஆனால் இதையெல்லாம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் செய்யமாட்டார்கள். காரணம் அவர்களது தனிப்பட்ட வருமானம் நின்று போகும்.

சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், ஸ்மக்லிங் ப்ராடக்ட்ஸைத் தவிர்ப்பதற்கும், கடைகள் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருத்தல் நலம். இது நன்மையா என அலசி ஆராய்ந்து பார்ப்போம். 

சரி, எல்லாக் கடைகளையும் விற்பனை வரி அலுவலகத்தில் பதிவு செய்துகொள்வது நல்லதா என்றால் அது யாருக்கு நல்லது? என்ற உப கேள்வியோடு இருக்க வேண்டும். 

இதில் சம்பந்தப்பட்ட மூன்று பிரிவினருக்கான நல்லது கெட்டதுகளைப் பற்றிச் சொல்லவேண்டும்.

1. கடைக்காரர்கள், 2. அரசாங்கம், 3. மக்கள்

பதிவு செய்யாமல் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் தெருவோர சிறுகடைக்காரர்களுக்கும், கிராமத்து கடைக்காரர்களுக்கும் இது நல்லது அல்ல.

அதனால் அந்தக் கடைகளின் வாடிக்கையாளர்களான தினக்கூலி வாங்கிப்பிழைக்கும் மக்களுக்கும் இது நல்லது அல்ல. 

ஏனென்றால், தெருவோரக்கடை வைத்திருப்பவர்கள் யாரும் மாடிவீட்டில் வாழ்வது இல்லை தான்!  அவர்கள் வயிற்றில் நாம் ஏன் அடிக்க வேண்டும்? வேறு வழியே இல்லை என்கிறபோது - இந்த நிலை எப்பொழுது வரும்? 

ஒரு குக்கிராமத்திலோ, காட்டுப்பகுதியிலோ,  மக்கள் தொகை மிக மிக குறைவாக (அதிக வியாபாரத்திற்கு வழியில்லாத பகுதிகளிலோ ) உள்ள பகுதிகளிலோ தான் இந்த மாதிரி கடைகள் இருக்கும்.

அங்குள்ள சொற்பமானவர்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் காத தூரம்போக வேண்டும். அதற்கான செலவைப் பாருங்கள். அதிக வியாபார வாய்ப்பு இல்லாத இடங்களில் ஒருவனுக்கு எப்படி பிரேக் ஈவன் வரும்? 

அப்படி அதையும்தாண்டி லாபம் என்ற ஒன்றை அவன் பார்க்க வேண்டும் என்றால் இப்படி விலையைக் கொஞ்சம் அதிகம் வைத்துத் தான் விற்க வேண்டி  வரும். 

ஒரு உதாரணத்திற்கு உங்கள் தெருவில் ஒரு சிறிய பலசரக்கு கடை இருக்கும்,  அதில் மளிகை, காய்கறி, கூல்ட்ரிங்க்ஸ் உட்பட அனைத்துமே இருக்கும். 

ஆத்திர அவசரத்திற்கு தினமும் ஏதாவது ஒன்றை அங்கு தான் வாங்கவேண்டியிருக்கும்.இல்லையென்றால் கொஞ்சம் தூரம் அதிகம் சென்று வாங்க வேண்டியிருக்கும். 

அந்த மாதிரி கடைகள் கொஞ்சம் அதிகம் விலை வைத்து விற்பதுவாடிக்கையான விஷயம் தான். அவர்களை கண்டுபிடித்து  தண்டனை வாங்கிக்கொடுத்தால் என்ன ஆகும்? 

நீங்கள் தினமும் அவசர ஆத்திரத்திற்கு உங்கள் வீட்டுக்காரரையோ அல்லது பிள்ளையையோ தொலைதூரத்திற்கு அனுப்பவேண்டிவரும்

அவர்களுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும். இது ஒரு சிச்சுவேசன். 


ஆனால், இதை அப்படியே.. டி.நகர் போன்ற பெரிய பசார் தெருக்களில் உள்ள சிறு சிறு கடைகளை மனதில் இருத்திப் பார்ப்போம். இங்கே எப்படி வியாபரம் நடக்கிறது? தி.நகரில், நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை, வேறு எங்கும் வாங்குவதை விட குறைவாகத்தான் இருக்கும். 

நெருக்கடியான சந்தை, அல்லது மக்கள் அதிகம் வந்து விற்பனையாகும் பகுதிகளில் உள்ள கடைகள்(ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் தவிர்த்து - இங்கெல்லாம் மக்களின் முன்திட்டமிடாமையையும், அவசரத்தையும் அவர்கள் பயன்படுத்திக் காசாக்குகிறார்கள்) 

நிச்சயமாக எம்.ஆர்.பி ஐ விட அதிகமாக விற்கமாட்டார்கள். சொல்லப்போனால் அதைவிடக் குறைவாகத்தான் விற்பார்கள்.சரி தான்.. 

ஆனால் பொருட்களின் தரம் மற்றும் அரசுக்கு வரும் வருவாய் இழப்பீடு(வரி) இவற்றைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும்? இது எப்படி மேற்கூறிய  கிராமங்களில் இருக்கும் கடைகளின் சிச்சிவேசனோடு ஒத்துப் போகும்?


அடுத்ததாக அரசாங்கம். அனைத்து கடைகளையும் பதிவுசெய்ய வலியுறுத்தினால் அரசுக்கு 100 ரூபாய் வருமான அதிகரிப்பு ஏற்படும் என்று கணக்கிட்டால் அதில் 80 சதவிகிதத்தை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், மற்றும் உயரதிகாரிகள் முதற்கொண்டு, கடைநிலை ஊழியர் வரையிலும் தான் சாப்பிடுவார்கள். 

வெறும் 20 ரூபாய் வருமானத்திற்காக, வியாபாரிகளிடம் பெறுமளவிலான அதிருப்தியையும், விலையேற்றம் காரணமாக மக்களிடம்  பெரிய அளவிலான எதிர்ப்பும் தான் மிஞ்சும். இதனால்  விலைவாசி கடுமையாக உயர்வதோடு, பல சிறு, குறு வியாபாரிகளும், தெருவோரக் கடைக்காரர்களும்,தொழிலைவிட்டு வெளியேறும் அவலங்களும் ஏற்படும்.


அடுத்ததாக மக்கள். ஒரு வரிவிதிப்பு அல்லது அனைத்து கடைகளுக்கும் வரிகட்டும் அவசியமாதல் நடைமுறைக்கு வந்தாலே, உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படப்போவது பொது மக்கள் தான். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்களின் வாழ்க்கை படு திண்டாட்டமாகிவிடும்.


எவை நம் நாட்டில் அதிகம் இருக்கின்றன? எங்கு வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது? அரசுக்கு இதனால் எவ்வளவு வரி இழப்பு. 

அதை விட இன்னும் கொடுமைகள் பெரிய பெரிய கடைகள் வைத்திருந்தாலும், பில்லிங் வசதி இருந்தாலும், அங்கும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் அதிகம். 

அவர்களும் வரியை ஒழுங்காக கட்டுகிறார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். வரிக் கட்டுதலும் நம் ஜனநாயகக் கடமைகளில் ஒன்றெனெக் கொள்வோம். 

பில் போடாமல் பொருள்(உதாரணத்திற்கு தங்கம்) வாங்கினால் அதற்கு ஒரு விலை. அரசைக் குறை சொல்லும் நாம், இவை எல்லாம் நம் ஜனநாயகக் கடமை எனவும், 

ஒரு வகையான ஒழுக்கம் எனவும் உணர்தல் வேண்டும். வேறு வழியாகவும் இந்த வரி வசூலித்தல் பற்றி யோசித்துப்பார்க்கலாம்.


மாத்தி யோசி:

பொருட்களுக்கு வரி போடக் கூடாது. வியாபாரிகளின் விற்பனை அளவிற்கு ஏற்றார் போல குறைந்த பட்சம் ஒன்றிலிருந்து அதிக பட்சமாக 5 வரையிலும் வரிவிதிக்க வேண்டும். 

அதாவது மாதம்1000 ரூபாய் விற்பனை செய்பவர் 10 ரூபாய் வரி கட்ட வேண்டும். 5000 ரூபாய் விற்பனைசெய்பவர் 250 ரூபாய் வரி கட்ட வேண்டும்.

அப்படியிருந்தால் அனைத்து வகையான கடைகளுக்கும் நேராகவே வணிகவரி அலுவலர் வந்து அவர் விவரங்களைக் கேட்டு வாங்கி கையோடு பதிவுச் சான்றிதழை வழங்க வேண்டும்.

 ஒருகடைக்காரர் பதிவு செய்யப்படவில்லை என்றால் அது அவரின் குற்றமாக ஆகாது, மாறாக அது  அந்த வணிக வரி அலுவலரின் குற்றமாகக் கருதப்படும்.

அதேப்போல் அவரே மாதாமாதம் வந்து வரியையும் வசூல் செய்துவிட்டுப் போய்விடவேண்டும். இப்படிச் செய்தால் அனைவரும் வரிகட்டுவார்கள். மக்களுக்கும் விலையேற்ற பிரச்சினை வராது. 

அரசாங்கத்திற்கும் இப்பொழுது உள்ளது போல நூறு மடங்கு வருமானம்அதிகரிக்கும்

வியாழன், 20 டிசம்பர், 2018

புதிய நுகர்வோர் சட்டம் சொல்வது என்ன?

புதிய நுகர்வோர் சட்டம் சொல்வது என்ன?

குளிர்கால கூட்டத் தொடரின் இறுதிநாளில் மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். 
அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் இந்த மசோதா விரைவில் சட்டமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய சட்டம் 1986-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கு மாற்றாக இருக்கும்.
இதில் மூன்று புதிய பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. 
முதலாவது பொருட்களில் ஏதேனும் சேதாரம் இருந்து அதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அது உற்பத்தியாளரின் பொறுப்பாகும். 
அடுத்ததாக, நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுவது, 
மூன்றாவதாக சமரச மையமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். வீடு வாங்குவது, கட்டுவது, தொலைத் தொடர்பு சேவைகள், ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்கள், டெலி ஷாப்பிங், நேரடி விற்பனை மற்றும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் வரும்.
முந்தைய சட்டத்தில் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் இணைக்கப்படவில்லை. 
மேலும் ரசீது வாங்காமல் பொருட்கள் வழங்குவது, வாங்கிய பொருட்களை திரும்ப பெறாமல் இருப்பது, சேவைகளை முன்கூட்டியே ரத்து செய்ய முடியாமல் போவது, முன்கூட்டியே கடனை செலுத்துவதை அனுமதிக்காதது, 
கூடுதலாக டெபாசிட் தொகையை கேட்பது, அளவுக்கு அதிகமான அபராதம் கேட்பது போன்றவையும் புதிய சட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.

உற்பத்தியாளரின் பொறுப்பு

புதிய சட்டத்தில் உற்பத்தியாளர் அல்லது சேவையை வழங்குபவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சேவையினால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் 
புதிய சட்டத்தின் கீழ் நுகர்வோர்கள் இழப்பீடு பெற முடியும். வடிவமைப்பு குறைபாடு, பொருள் தயாரிப்பில் விதிமுறைகளை பின்பற்றாதது, 
பொருளை எப்படி பயன்படுத்துவது ஆகியவை குறிப்பிடப்படாதது உள்ளிட்ட சில காரணங்களால் நுகர்வோர் இழப்பீடு பெற முடியும். 
பழைய விதிகளின் கீழ் இழப்பீடு பெறுவதற்கு அனைத்து காரணங்களையும் நிரூபித்தாக வேண்டும். ஆனால் புதிய மசோதாவில் ஏதேனும் ஒரு காரணத்தை நிரூபிக்கும் பட்சத்தில் இழப்பீடு கோர முடியும்.

ஒழுங்குமுறை ஆணையம்

செபி, ஐஆர்டிஏ போன்ற ஒழுங்குமுறை ஆணையங்கள் இருப்பதை போல, நுகர்வோர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது குறித்த திட்டமும் இந்த மசோதாவில் இருக்கிறது. 
நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் இருந்தாலும், இவற்றுக்கு போதுமான அதிகாரம் இல்லை என்பதால் புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட இருக்கிறது.
நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் என பெயரிப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு அனைத்து மண்டலங்களிலும் அலுவலம் இருக்கும். 
வாடிக்கையாளர்கள் புகார் மீது விசாரணை நடத்தி, இழப்பீடு வழங்குவது குறித்த உத்தரவினை வழங்குவதற்கு இந்த ஆணையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 
மேலும் தவறான விளம்பரங்கள் மற்றும் முறைகேடான வர்த்தகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
நுகர்வோர்கள் எழுத்து பூர்வமாகவோ அல்லது எலெக்ட்ரானிக் முறையிலோ புகார்களை அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அல்லது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் மண்டல அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். 
இந்த ஆணையம் வழங்கியிருக்கும் தீர்ப்பினை செயல்படுத்தவில்லை எனில் அது தண்டனைக்குரிய குற்றமாகும். 
ஆறு மாத சிறை தண்டனை அல்லது 20 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது. 
அதேபோல தவறான விளம்பரங்கள், உணவு கலப்படம், போலி பொருட்கள் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். 
தவறான விளம்பரங்களுக்கு இரு ஆண்டுகள் சிறை ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க முடியும்.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை கொடுக்கும் அல்லது 
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விளம்பரங்களில் நடித்திருக்கும் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

சமரச மையம்

தற்போது மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் தீர்ப்பாயங்கள் உள்ளன. 
புதிய சட்டத்தின் படி, இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்படும் பட்சத்தில் சமரசம் ஏற்படுத்திகொள்ள புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இதற்காக மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் சமரச மையங்கள் அமைக்க இந்த மசோதா பரிந்துரை செய்கிறது. 
இந்த மையம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசமாக தீர்த்துக்கொள்வதற்கு உதவும்.

செவ்வாய், 11 டிசம்பர், 2018

கூடலூர் இளையோர் விழிப்புணர்வு

இந்திய அரசு நேரு யுவ கேந்திரா, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து

இளையோர் நல்லெண்ண கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடலூர் PWITI இல் நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.

பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் வரவேற்றார். 

நுகர்வோர் மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நேரு யுவ கேந்திரா உதவியாளர் கேசவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 நேரு யுவ கேந்திரா நிகழ்ச்சி அலுவலர் சரஸ்வதி பேசும்போது இளையோர்கள் பிரச்சனைகளை சந்திக்க தைரியம் தேவை இவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் இருக்க வேண்டியது அவசியம்.
 நேரு யுவகேந்திரா இளையோர் நமன்றகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.  விளையாட்டு. யோகா போன்றவை மனதை வலுப்படுத்த கூடியது என்றார்.

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பூராஜன் பேசும்போது சாலை விபத்துக்களில் அதிகமாக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன இவற்றை தடுக்க வேண்டும்.

 நீலகிரி மாவட்டத்தில் 35 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க வேண்டும் என்றார்.
காசிகா ias பயிற்சி மைய நிறுவனர் சுரேஷ், ஓய்வு பெற்ற ஆசிரியர் சத்தியநேசன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

 நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சத்தியசீலன் நன்றி கூறினார்.

கூடலூர் இளையோர் விழிப்புணர்வு

இந்திய அரசு நேரு யுவ கேந்திரா, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து

இளையோர் நல்லெண்ண கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடலூர் PWITI இல் நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.

பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் வரவேற்றார். 

நுகர்வோர் மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நேரு யுவ கேந்திரா உதவியாளர் கேசவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 நேரு யுவ கேந்திரா நிகழ்ச்சி அலுவலர் சரஸ்வதி பேசும்போது இளையோர்கள் பிரச்சனைகளை சந்திக்க தைரியம் தேவை இவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் இருக்க வேண்டியது அவசியம்.
 நேரு யுவகேந்திரா இளையோர் நமன்றகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.  விளையாட்டு. யோகா போன்றவை மனதை வலுப்படுத்த கூடியது என்றார்.

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பூராஜன் பேசும்போது சாலை விபத்துக்களில் அதிகமாக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன இவற்றை தடுக்க வேண்டும்.

 நீலகிரி மாவட்டத்தில் 35 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க வேண்டும் என்றார்.
காசிகா ias பயிற்சி மைய நிறுவனர் சுரேஷ், ஓய்வு பெற்ற ஆசிரியர் சத்தியநேசன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

 நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சத்தியசீலன் நன்றி கூறினார்.

திங்கள், 29 அக்டோபர், 2018

விருது 2018 29.10.2018 ஊட்டி








எருமாடு அயோடின் உப்பு சோதனை

எருமாடு அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த பட்டது.

மாணவிகள் கொண்டு வந்த உப்பு பரிசோதனை திரவம் பயன்படுத்தி  பரிசோதனை நடத்தப்பட்டது.












அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள்

உலகில் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை தவிர்க்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே


ஆண்டு தோறும் அக்டோபர் 21 ம் தேதி உலக அயோடின் குறைபாடு தினம் (Global Iodine Deficiency Day, October 21) அனுசரிக்கப்படுகிறது
மனித உடலுக்கு மிகவும் அவசியமானது, கால்சியம், இரும்பு, அயோடின், தாமிரம், பாஸ்பரம், மாங்கனீசம், துத்தநாகம் போன்ற சத்துகள்! இவற்றை சேர்க்க தவறினால் கோளாறுகளும் அது தொடர்ந்து நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. 
உடலிலுள்ள செல்கள் வளர்ச்சி அடைய இந்த சத்துக்கள் மிக அவசியம். இவற்றுள் அயோடின் மிக முக்கியமானது. அயோடின் கலந்த உப்பை போதுமான அளவில் தினசரி பயன்படுத்துவது ஓர் ஆரோக்கியமான பழக்கம்.
CRz7iiVUsAADMY1
மனித உடலுக்கு தினசரி மிகக் குறைவான அளவே 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. குறைவாகத்தானே தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால் என்ன? மற்றச் சத்துகள்தான் நிறையவே இருக்கிறது என்று அலட்சியமாக இருந்தால் அவதிப்படப் போவது நீங்கள் தான்.
முதலில் அயோடின் என்றால் என்ன என்று கேட்டால் பலரும் அது ஒரு வகையான உப்புன்னு நெனைக்கின்றாங்க. அது ரொம்ப தப்பு. அயோடின் என்பது ஒருவகையான மினரல் ஆகும். ஆறு, நதி, ஏரி போன்ற நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இயற்கையாகவே அயோடின் அதிகமாக காணப்படும். 
குறிப்பாக, நீர்நிலைகளின் மணற்பரப்பிலும் அயோடின் ஏராளமாக இருக்கும். இந்த அயோடின்தான் கடல்நீரிலும் மிகுந்து காணப்படுகிறது. உப்பில் அயோடின் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான். பச்சைத் தாவரங்களிலும் அயோடின் உள்ளது.
இயற்கையான நீர் நிலைகளின் மூலமாக மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அயோடின் சத்து பல நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் அயோடின் சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. 
முக்கியமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான். கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 4.7 சதவிகிதம் பேருக்கு உலகளவில் தைராய்டு குறைபாடு உள்ளது.
சுருக்கமா சொல்லணும்னா மனிதர்களின் உடல் உயரம் மற்றும் பருமனை நிர்ணயிப்பது இது தான்! சிலர் உயரமாகவும், சிலர் குள்ளமாகவும், சிலர் பருமனாகவும், வேறு சிலர் ராட்சத தோற்றம் கொண்டவர்களாக இருப்பதற்கு இந்த அயோடினே காரணம்.
 மேலும் அயோடின் பற்றாக்குறை குழந்தைகளில் உடல் வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாட்டை மந்தமாக்குகிறது. 10 முதல் 15 ஐ.கியூ பாயிண்ட்களை இழக்கச் செய்கிறது. இதனால், பள்ளிப் படிப்பில் செயல்திறன் குறைந்துவிடுகிறது. மனித உடல் வளர்ச்சியில் வேறுபாடுகளை உருவாக்குவது, உடலிலுள்ள தைராய்டு சுரப்பிகளின் ( Thyroid Glands) வேலை.
இந்த தைராய்டு சுரப்பிகள் கழுத்தில் முன்பக்கமாக குரல் வளைக்கு கீழ் அமைந்துள்ளன. பக்கத்துக்கு ஒன்றாக இரு சுரப்பிகள் இருக்கின்றன. சுமார் 25 கிராம் எடையுள்ள இவை ஒரு திசு மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

இவைகளிலிருந்து தைராக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள அயோடினில் பெரும்பகுதி தைரோகுளோபின் என்ற பொருளாக இருக்கிறது.
இதுக்கிடையிலே நமது உடலில் இயற்கையாகவே அயோடின் உள்ளது. ஆனால், இந்தச் சத்து பற்றாக்குறையின் போது நமது உடலுக்கு அயோடின் சேர்ப்பது அவசியமாகிறது.
அறிகுறி
காரணம் இல்லாமல் உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது,
மலட்டுத் தன்மை,
முடி உதிர்வு,
சருமத்தில் வறட்சி, குளிர் / வெப்பத்தை தாங்க முடியாமை,
களைப்பு,
மனச் சோர்வு,
அதிக வியர்வை,
படபடப்பு,
எப்போதும் தூக்க கலக்கம்,
மலச்சிக்கல் / வயிற்றுப் போக்கு,
கழுத்தில் வீக்கம் போன்றவை
இதன் அறிகுறிகளாக இருக்கின்றன.
ஆண்களுடன் ஒப்பீடும் போது பெண்களுக்கு தைராய்ட்டு ஏற்படும் அபாயம் 5 மடங்கு அபாயம்.
இந்தச் சத்துக் குறைவால் இந்தியாவில் காஷ்மீர், உத்தரப் பிரதேசம், நாகலாந்து, அசாம், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், வட கிழக்கு எல்லைப் புற மாகாணம் போன்ற பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இந்தியாவில் சுமார் 7.1 கோடி பேர்கள் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருகிறார்கள். மேலும் 20 கோடிக்கும் மேலானோர் இந்த பாதிப்பின் ஆபத்தில் இருக்கிறார்கள்.
பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பு
அயோடின் சத்து உடலில் குறைந்தால் பல்வேறு நோய்கள் உருவாவதை தடுக்க முடியாது. இதில், ஹைபோ தைராய்டிசன் நோய் அபாயாகரமானது. இந்நோய் ஏற்பட்டால் கழுத்திலுள்ள தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கம் பெரிய கட்டிப் போல் பெருத்துவிடும்.
அப்போது தைராய்டு சுரப்பி குறைந்த அளவில் வேலை செய்யும். அதன் விளைவு எடை அதிகரிப்பு, சுறுசுறுப்பு, பசியின்மை, குறைவான இருதயத் துடிப்பு, குறைந்த வளர்சிறை மாற்றம், மனவளர்ச்சி பாதிப்பு போன்றவை ஏற்படும்.
குழந்தைகளை இக்கோளாறுகள் அதிகமாக பாதிக்கின்றன. அவர்களின் உடலில் தைராய்டு சுரப்பிகள் குறைவாயாக வேலை செய்தால் அயோடின் குறைவு உருவாகும். அதனால், கிரெட்டினிசம் என்னும் நிலை உண்டாகிறது. 
பாதிக்கப்பட்ட குழந்தைகள் குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போதிய அளவு மன வளர்ச்சி இருப்பதில்லை. அயோடின் பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன வளர்ச்சி குறைவாக இருக்கும்.
இதனால், அவர்களின் பள்ளிப் படிப்பில் முன்னேற்றம் இருக்காது. இந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படக்கூடும். பாதிப்பு அதிகரிக்கும் போது மனைநிலை பாதிப்பு ஏற்படும். இந்த அயோடின் பற்றாக்குறை மேலும் கடுமையான விளைவுகளைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் பிரச்னையின் ஆரம்பக் கட்டத்திலேயே கவனித்து சிகிச்சை பெறுவது அவசியம்.
சிகிச்சை
அயோடினை நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து பெறுகிறோம். சில சமயங்களில் உணவு பொருட்களில் போதுமான அளவு இருக்காது. அப்போது தனியாகச் சாப்பிட வேண்டும்.
அயோடினை நாம் நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் அதைத குடிக்கும் நீரிலோ அல்லது உணவுடன் சேர்த்துக் கொள்ளும் உப்பிலோ (சோடியம் அயோனைடு) கலந்துக் கொள்ளலாம். உப்போடு அயோ டினை சேர்ப்பது சுலபமான வழி. இதற்காக அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் எலக்ட்ரான்சின் மாத்திரைகளை காலையில் வெறும் வயிற்றில் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப முழு அல்லது பாதி மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்களும் வழக்கம் போல் சாப்பிட்டு வர வேண்டும். அது பிறக்கும் குழந்தைக்கு இந்த பிரச்னை வராமல் தடுக்க உதவும். அதே நேரத்தில் இந்த முடிவை மருத்துவ நிபுணரை கலந்து ஆலோசித்தே எடுக்க வேண்டும்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அயோடின் கலக்காத உப்பை விற்கத்தடை உள்ளது. இதன் மூலம் பெரும்பாலோருக்கு அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பை தடுத்து வருகிறது
அயோடின் யாருக்கு எவ்வளவு?
தினந்தோறும் ஒவ்வொரு நபருக்கும் தேவைப்படும் அயோடினின் அளவு அவர்களின் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
சிசுகளுக்கு அவை கருவில் வளரும் போதே 5 முதல்10 மாதங்களில் 40 முதல் 50 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. இந்த அளவு குழந்தைகள் வளர வளர வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கிறது.
* 1 – 3 வயது – மைக்ரோ 70 கிராம்
* 4 – 6 வயது – 90 மைக்ரோ கிராம்
* 7 – 10 வயது – 120 மைக்ரோ கிராம்
* 11 – 50 வயது – மைக்ரோ 150 கிராம்